Tuesday, June 14, 2011

பச்சை பட்டாணி குருமா.

தேவையான பொருட்கள்

 பச்சை பட்டாணி---1கப்
உருளைக்கிழங்கு நறுக்கியது--1கப்
தேங்காய்ப்பால்---1கப்
வெங்காயம் நறுக்கியது--1கப்
தக்காளி--4
பச்சைமிளகாய்---4
மிளகாய் தூள் --அரைஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
இஞ்சி-சிறு துண்டு
பூண்டு--5 பல்
கொத்தமல்லி---1கட்டு
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க

பட்டை சோம்பு லவங்கம்


உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி தனித்தனியாக வேகவைக்கவும்.

கொத்தமல்லி, பச்சைமிளகாய்,இஞ்சி அரைக்கவும்.

2 தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.

கடாயில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு பட்டை சோம்பு லவங்கம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பூண்டு சேர்க்கவும். வதங்கியதும், தக்காளி ,தக்காளி சாறு சேர்க்கவும்.

அரைத்த விழுதை சேர்த்து லேசாக கொதிக்கவிடவும்.

உருளைக்கிழங்கு,பச்சைபட்டாணி சேர்க்கவும்.

உப்பு , கரம் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியாக தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

பூரி, சப்பாத்தி, பிரியாணிக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.



Thursday, June 9, 2011

புதினா புலாவ்




  புலாவ் வகைகள் வடநாட்டில் புகழ் பெற்றது. புதினா புலாவ் குழந்தைகளுக்கு ஏற்ற ,விரும்பி உண்ணக் கூடிய சத்தான உணவு.
தேவையானபொருட்கள்                                             

புதினா 1கட்டு
பச்சை மிளகாய்---4
அரிசி---250 கிராம்
தேங்காய் பால் ---200 மி.லி
இஞ்சி, பூண்டு விழுது ---1 ஸ்பூன்
வெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கவும்.
உப்பு --1 ஸ்பூன்
எண்ணை ---2 ஸ்பூன்
 
பட்டை சோம்பு சிறிதளவு தாளிப்பதற்கு


புதினா, பச்சை மிளகாயை அரைக்கவும். அரிசியை களைந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணை விட்டு வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அரைத்த புதினா விழுது, தேங்காய்பால், 1 டம்ளர் தண்ணீர் போட்டு கொதிக்க விடவும்.
அரிசியை சேர்த்து கிளறிவிட்டு உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை விடவும்.
புதினா புலாவ் தயார்.
செய்வதற்கு 15 நிமிடம் ஆகும். 4 பேருக்கு பரிமாறலாம்.
தயிர் வெங்காயம், கோபி மஞ்சூரியன் தொட்டுக் கொள்ள ஏற்றது.


Wednesday, June 8, 2011

கர்நாடகா ஸ்டைல் வாழைப்பூ பருப்புசிலி

பருப்புசிலி என்பது கர்நாடகா மாநிலத்தில் அனைவராலும் செய்யப்படும் சத்தான கறி வகை. பருப்புகள்,காய்கள் சேர்த்து செய்யும் போது சத்தும், சுவையும் கிடைக்கும்.


தேவையானவை

வாழை பூ --சிறியது சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு-- 100 கிராம்
துவரம் பருப்பு ---50 கிராம்
மிளகாய் வத்தல்--- 4
உப்பு ----ருசிக்கேற்ப
தேங்காய் துருவல்--- கால் கப்
எண்ணை ---3 குழிக் கரண்டி

தாளிக்க
பெருங்காயம், கறிவேப்பிலை.மிளகாய்

பருப்புகளை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
பருப்பு ,மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய வாழை பூவை குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

கடாயில் 2 கரண்டி எண்ணை விட்டு அரைத்த பருப்பை போட்டு நன்கு கிளறவும். மொறு மொறுவென உதிரியாக வர வேண்டும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயம் தாளித்து வாழைப்பூவைபோட்டு சிறிதளவு உப்பு போட்டு கிளறவும். அதோடு வறுத்து வைத்த பருப்புகள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும் சுவையான பருப்புசிலி தயார்.
மோர்க்குழம்பு, ரசம் சாதத்திற்கு ஏற்றது.


Monday, June 6, 2011

நன்மை தரும் எளிய விரதங்கள்

மகா லட்சுமி இல்லாத இடம் "இல்லம்" என்று அழைக்கப்படமாட்டாது. அந்த தேவியை மகா சக்தியை மிக எளிதாக வழிபடலாம். மிகுந்த பிரயாசை எல்லாம் தேவையில்லை.கடினமான மந்திர தந்திரங்களும் தேவையில்லை.



 கன்று ஈன்ற பசுவின் சாணத்தை கொண்டுவந்து அதில் அகல் போல் செய்து உடைந்து விடாமல், நிழலில் காய வைக்கவும். வழிபாடு தொடங்கும் முன், பூஜை அறையை சுத்தம் செய்து , கோலமிட்டு ,மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சூட்டி குத்து விளக்கேற்றவும்.பின்  சாண அகலில்  நெய் விட்டு ,பஞ்சுத் திரி, வாழை தண்டு திரி, தாமரை திரி போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி வௌ்ளிக் கிழமை அன்று விளக்கேற்றி தேவியை வழிபட வேண்டும். தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறினாலே போதும் .அல்லது கீழ் உள்ள மகாலட்சுமி மந்திரம் 11 முறை கூறவும்.


 ஓம் மகா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்


பாயசம், எலுமிச்சை சாதம் அல்லது ஏதாவது பழம் ,வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும். இவ்வாறு 5,7, 9 வாரங்கள் என முடிந்த அளவு  விளக்கேற்ற அன்னையின் அருள் நிச்சயம் கிட்டும்.
ஒவ்வொரு வாரமும் புது அகல் செய்து தீபம் ஏற்ற வேண்டும் .பழைய அகல் தீபத்தை தண்ணீரில் கரைத்து துளசி மாடம், அல்லது ஏதாவது செடியில் கால்படாத இடத்தில் சேர்க்கவும்.

உருளைக்கிழங்கு அல்வா

உருளைக்கிழங்கை பொடிமாஸ், பொரியல், மசாலா மட்டும் செய்யாமல் வித்தியாசமாய் அல்வா செய்யலாமா



தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு --கால் கிலோ
சர்க்கரை----300 கிராம்
சர்க்கரை சேர்க்காத கோவா---100 கிராம்
பால் ---1கப்
நெய்-- -150 கிராம்
ஏலப் பொடி ---சிறிது
பாதாம், முந்திரி ,கிஸ்மிஸ்---அலங்கரிக்க


உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் 3ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
கடாயில் பால், சர்க்கரை ,வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.
கெட்டியாக வரும் போது, கோவா ,மீதமுள்ள நெய் விட்டு கிளறவும். சுருண்டு வரும் போது ஏலப் பொடி சேர்க்கவும். பாதாம், முந்திரி், கிஸ்மிஸால் அலங்கரிக்கவும். சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயார்.