Sunday, March 13, 2011

தீப வழிபாடு---1

பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்தே தெய்வ வழிபாடு இருந்து வருகிறது. முதன் முதலில் பஞ்ச பூதங்களையும், பின் மரம்,செடி, கொடி, ஊர்வன, பறப்பன,என விலங்கு, பறவை முதலியவற்றையும் கடவுளாக வழிபட்டனர்.காலப் போக்கில் உருவ வழிபாடு மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டது. பூஜை முறை எதுவானாலும் நாம் முதலில் தீப மேற்றியே இறைவனை வழிபடுகிறோம். எல்லா தெய்வத்திற்கும் ஒரே விதமாக தீபம் ஏற்றலாமா? என்றால் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு விதமான தீபம் ஏற்ற வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த தெய்வத்திற்கு ,இப்படி தீப ஏற்றிட இன்னின்ன பலன் கிடைக்கும் என்கிறது வேதம்.
1.நல்லெண்ணை----தீபத்திற்கு உகந்தது.சனி பரிகாரம் தரும்.லட்சுமி கடாக்ஷம் கிட்டும்.
2.தேங்காய் எண்ணை---நல்ல தேவதைகள், வீட்டில் வாசம் செய்யும். துர்தேவதைகள் அண்டாது. கணவன், மனைவி பாசம் கூடும்,பைழய பாவங்கள் அனைத்தும் போகும்.
பிள்ளையாருக்கு தினமும், தேங்காய் எண்ணை தீப ஏற்ற எண்ணியதெல்லாம் நடக்கும்.
3.இலுப்பை எண்ணை ---எல்லா பாவங்களும் தீரும்,மோட்சம் கிட்டும்.
சிவனுக்கு இலுப்பை எண்ணை தீப ஏற்றி வழிபட நல்ல பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
4.விளக்கெண்ணை ----தெய்வ அருள் கிட்டும்,புகழ்,கீர்த்தி ,ஜீவன சுகம் கிட்டும்.தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும்.
5.வேப்ப எண்ணை ---குல தெய்வம் எதுவானாலும் அதற்கு ஏற்றது இந்த எண்ணை .
6.பசு நெய்---லட்சுமி வாசம் புரிவாள்.மன மகிழ்ந்துஎல்லா சுகமும்,சந்தோஷமும் கிடைக்கும்.
அம்பிகைக்கு நெய்,விளக்கெண்ணை ,வேப்பெண்ணை,இலுப்பை எண்ணை,தேங்காய் எண்ணை கலந்து 1 மண்டலம்(45நாட்கள்) தொடர்ந்து தீபம் ஏற்ற அம்பாளின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.

தீப மந்திரம்

காலை தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

ஸோயம் பாஸ்கர வித்யஸ் த கிரணோத் கரபாஸ்வர தீப ஜ்யோதிர் நமஸ்துப்யம் சுப்ர பாதம் குருஷ்வமே.

மாலை தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

சிவம் பவது கல்யாணம் ஆயுர் ஆரோக்கிய வர்த்தனம் மம துக்க விநாசாய ஸந்த்யா தீபம் நமோ நம .

விளக்கேற்றி பின் தீபத்தை வழிபடும் போது கூற வேண்டிய மந்திரம்
தீப ஜோதியானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்
என்று கூறி வழிபட எல்லா நலன்களும் சேரும்.
ரஞ்சனா