Wednesday, June 8, 2011

கர்நாடகா ஸ்டைல் வாழைப்பூ பருப்புசிலி

பருப்புசிலி என்பது கர்நாடகா மாநிலத்தில் அனைவராலும் செய்யப்படும் சத்தான கறி வகை. பருப்புகள்,காய்கள் சேர்த்து செய்யும் போது சத்தும், சுவையும் கிடைக்கும்.


தேவையானவை

வாழை பூ --சிறியது சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு-- 100 கிராம்
துவரம் பருப்பு ---50 கிராம்
மிளகாய் வத்தல்--- 4
உப்பு ----ருசிக்கேற்ப
தேங்காய் துருவல்--- கால் கப்
எண்ணை ---3 குழிக் கரண்டி

தாளிக்க
பெருங்காயம், கறிவேப்பிலை.மிளகாய்

பருப்புகளை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
பருப்பு ,மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய வாழை பூவை குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

கடாயில் 2 கரண்டி எண்ணை விட்டு அரைத்த பருப்பை போட்டு நன்கு கிளறவும். மொறு மொறுவென உதிரியாக வர வேண்டும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயம் தாளித்து வாழைப்பூவைபோட்டு சிறிதளவு உப்பு போட்டு கிளறவும். அதோடு வறுத்து வைத்த பருப்புகள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும் சுவையான பருப்புசிலி தயார்.
மோர்க்குழம்பு, ரசம் சாதத்திற்கு ஏற்றது.