Wednesday, May 11, 2011

கேழ்வரகு ---கோதுமை ரவை இட்லி

டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், நீரிழிவு நோய் கண்டவர்களுக்கும் கேழ்வரகும், கோதுமையும் அதிகளவு சக்தி தருபவை. எல்லாருக்கும் இந்த வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

கேழ்வரகு--கோதுமை இட்லி

தேவையானவை

கேழ்வரகு மாவு--1கப்
கோதுமை ரவை---1கப்
 கெட்டியான தயிர் 3கப்
துருவிய காரட் 1கப்
உப்பு தேவையானது

தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, வேர்கடலை ,கறிவேப்பிலை



கேழ்வரகு மாவு, கோதுமை ரவை ,துருவிய காரட், உப்பு போட்டு கலந்து அதோடு தயிர், சிட்டிகை சோடா உப்பு,  தேவையிருந்தால் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.   தாளித பொருட்களை தாளித்து மாவில் கொட்டி கலக்கவும்.

மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

இட்லி செய்வது போல் செய்து சூடாக வடகறி அல்லது சட்னி--சாம்பாருடன் பரிமாறவும்.

விருப்பமிருந்தால் ஓட்ஸை ரவை போல் உடைத்து இதோடு கலந்தும் செய்யலாம்.




சர்க்கரை வள்ளி மிளகு கூட்டு

கர்நாடகாவின் பாரம்பரிய சமையல்களில் மிளகு கூட்டு முக்கிய இடம் பெற்றது. எல்லா விஷேசங்களிலும், எல்லா காய்களிலும், மிளகு கூட்டு செய்வர்.அதற்கு தொட்டுக் கொள்வதற்கு மோர்க்குழம்பும் இருக்கும்.

சர்க்கரை  வள்ளிக் கிழங்கு மிளகு கூட்டு

தேவையானவை
சர்க்ரை வள்ளிக் கிழங்கு நறுக்கியது ---1கப்
பச்சை பட்டாணி----1கப்
துவரம் பருப்பு---அரை கப்
புளி---கோலி அளவு
உப்பு தேவையானவை

வறுத்து அரைப்பதற்கு
உளுத்தம் பருப்பு---3 ஸ்பூன்
மிளகு --1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்---2
தேங்காய் துருவல் ---1கப்

தாளிப்பதற்கு
நல்லெண்ணை ---2 ஸ்பூன்
கடுகு,சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை


சர்க்கரை வள்ளியை சுத்தம் செய்து, சதுரமான துண்டுகளாக நறுக்கவும்.
அதோடு பட்டாணியையும் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் விடவும்.
துவரம்பருப்பை குழைய வேகவிடவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர்த்து மற்றதை எண்ணையில் சிவக்க வறுத்து, தேங்காயுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
புளியை கரைத்து,அதில் வெந்த காய்களை போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும் போது, அரைத்த விழுது, உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பருப்பையும் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி  நல்லெண்ணையில் தாளித்து சேர்க்கவும்., இறக்கிய பின் உளுந்து அப்பளம் சுட்டு பொடியாக்கி கூட்டில் சேர்க்கவும்.