Wednesday, May 25, 2011

பாகற்காய் புளியோதரை

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ....இது பழைய பழமொழி.
பாகற்காய் என்றால் வீடே நடுங்கும்....இது புது மொழி.

கசப்பான பாகற்காயையும் சுவையானதாக்க முடியும்
பாகற்காய் புளியோதரை செய்ய தேவையானவை


பாகற்காய் --கால் கிலோ
புளி ---நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு --2ஸ்பூன்
மல்லி விதை---4 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--5
கடுகு--1ஸ்பூன்
வெந்தயம்---அரை ஸ்பூன்

தாளிக்க

கடுகு--1 ஸ்பூன், கடலைப்பருப்பு---2ஸ்பூன், மிளகாய் வத்தல் --2, வறுத்த வேர்கடலை ---2 ஸ்பூன்,கறிவேப்பிலை,

பருப்பு ,மல்லிவிதை, மிளகாயை தனியாகவும், கடுகு வெந்தயத்தை தனியாகவும் வறுத்து பொடி செய்யவும்.
புளியை கெட்டியாக கரைக்கவும்.
பாகற்காயை சுத்தம் செய்து விதை நீக்கி ,நறுக்கி, எண்ணையில் பொரித்து கொள்ளவும்.
கடாயில் தாளிதம் செய்துக் கொண்டு ,கெட்டியாக கரைத்த புளி கரைசலை ஊற்றி ,சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்கும் போது, அரைத்த பொடியை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும், பொரித்த பாகற்காயை சேர்க்கவும்.  உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். 2 குழிக் கரண்டி நல்லெண்ணை சேர்த்து கிளறி இறக்கவும்.


சூடான சாதத்தில் இந்த பேஸ்டிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து கலந்து சாப்பிடவும்.