Friday, November 8, 2019

மனதிற்குள் மழைச்சாரல்
-----------------------------------------
யாருமற்ற தெருமுனையில்
தனித்திருந்த மாலைப்பொழுதில்
வீசி அடங்கிய தென்றலுக்குப்பின்
தவழ்ந்து வந்தது சிறு தூரல்கள்

வனிதை நீயும் வந்து நின்றாய்
இடைவெளியை குறைத்துக்கொண்டு
உன்னிதழ் பட்டுத்தெறித்த தூரலொன்று
உள்ளத்தில் பொழிந்தது பூமழையென்று

பக்கத்தில் நானிருந்து
பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்
நிலவாக நீ வந்து
நெஞ்சினுள்ளே நிறைகின்றாய்

மோகத்தின் கவிதைக்கு
முன்னுரைகள் எழுதிவிட்டதடி
முத்துக்களின் முத்தத்தில் சத்தமிடும்
உன் கால் கொலுசு

எட்டி வைத்த நாலடியில்
கொட்டி கிடக்கும் இன்னிசையால்
கட்டி என்னை இழுக்கின்றாய்
விட்டிலாகி விட்டேனடி..

மனதோரம் மழைச்சாரல் வீச
மனம் பொங்கி மகிழுதடி
தேவதை உன்னை கொஞ்சியதால் 
தேனாய் இனிக்குதடி இதழோரம்......!!