Tuesday, April 12, 2011

இசை--எளிய அறிமுகம்-3

இசை --எளிய அறிமுகம்.

நாரதர் ,ராகங்களை ஆண் ராகம் --பெண் ராகம் என வகை படுத்தியுள்ளார். இவருக்கு பின், கிபி 16 நூற்றாண்டு,17ம் நுற்றாண்டில்,ராமாமாத்யர், வேங்கடமகி இருவரும் தற்போதுள்ள இசை வடிவத்தை அமைத்துள்ளனர். 15ம் நூற்றாண்டின் குப்தர் காலமே இசைக்கு பொற்காலமாக இருந்தது. அப்போது தான் இசை பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அடைந்தது.வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி, தென்னிந்தியாவின் கர்நாடக இசை ,இரண்டும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்தின் இரு கிளைகளாக உருமாறின.ஹிந்துஸ்தானி, இசை வடிவத்தை மையமாக கொண்டும், கர்நாடக இசை, பாடல்களை அதாவது சாஹித்தியத்தை மையமாக கொண்டும் உருவானது.நாட்டுப்புற பாடல்களிலிருந்து இசை வடிவங்களை, பண்களை கொண்டு இவை மேலும் வளர்ச்சியடைந்தன.கி.பி 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவர் ,தனது சங்கீத ரத்னாகரம் எனும் நூலில் 264 ராகங்களை ,திராவிட, வட இந்திய இசையிலிருந்து உருவாக்கினார்.

ராகம், தாளம்

இனிமை,மென்மை ,குழைவுத் தன்மைக்கு அடிப்படையாக விளங்குவது ராகம். "ரிதம்" என்று கூறும் கட்டிற்கு ,அடிப்படை தாளம். உள்ளிருக்கும் ஆத்மாவிலிருந்து வெளிப்படுவது ராகம். நமது சிந்தனை, எண்ணம் ,உணர்ச்சி இதை வெளிக்காட்டும் விதமாக விளங்குவது ராகம்.நாதத்திலிருந்து தோன்றியது ராகம். நாதம் என்ற வடமொழி சொல்லுக்குத் தமிழில் "இசை ஒலி" என்று பெயர். ஒழுங்கு செய்யப்பட்ட அல்லது அழகு செய்யப்பட்ட ஒலிக்குறிப்பே நாதம் என்று கூறப்படுகிறது. நாதம் இயற்கையாகவும், மனிதன் மூலமும் உண்டாக்கக் கூடியது. இந்த இசை ஒலியிலிருந்து நாதமும், அதிலிருந்து சுருதியும், அதிலிருந்து ஸ்வரங்களும் ,ஸ்வரங்களின் கோர்வையிலிருந்து பல்வேறுபட்ட ராகங்களும் பிறக்கின்றன.ஒவ்வொரு ராகமும் ,பண்ணும் சில குறிப்பிட்ட ஸ்வரங்களினால் பின்னப்பட்ட அற்புத அமைப்பாகும்.
நாதம் இருவகை .1. ஆஹதம் 2. அனாகதம்.
(இன்னிசை தரும்)