Saturday, May 14, 2011

Spanish மொழி கற்கலாம்

இந்த பதிவில் prepositions தொடர்ச்சியை தந்துள்ளேன்.


The letter is under  your book.-------La carta está en tu libro.(லா கார்தா எஸ்தா என் து லீப்ரோ.)
I am staying at home.------Me quedo en casa.(மி கெதோ என் காசா.)
The driver is in front of the door.----- El conductor se encuentra en frente a la puerta.(எல் கன்துக்தர் சே என்குவந்த்ரே என் பிரன்தே அ லா புஅர்தா.)


I will be there around 3 pm------Yo estaré allí a las 3 pm  ( யோ எஸ்தாரே அயி அ லாஸ் திரேஸ்(3)  பிஎம்மே)
I wasn't there for the past 2 year-------------Yo no estaba allí durante los últimos dos años.( யோ நோ எஸ்தாபா அயி துரந்தே லோஸ் அல்திமோஸ் தோஸ் அன்யோஸ்.)
Within this week I'll finish my work.-------  Dentro de esta semana voy a terminar mi trabajo.(தேன்த்ரோ தே எஸ்தா செமானா வோய் அ தெர்மினார் மி திரபாஹோ)
During the class I can't see you.---Durante la clase no te puedo ver.(துராந்தே லா கிளாசே நோ தே புயதோ வெர்)
I usually go to school by bus.---- Yo suelo ir a la escuela en autobús.(யோ சுயலோ இர் அ லா எஸ்குஅலா என் ஆட்டோ பூஸ்)

The flower is in the garden -  La flor está en el jardín ( லா ஃப்ளோர் எஸ்தா என் எல் ஹார்தின் )
             in the morning--------por la mañana( போர் லா மன்யானா)
             in the afternoon------por la tarde(போர் லா தார்தே)
             in the evening -------por la noche(போர் லா நோச்சே)
             in a box -  en una caja( என் உன காஹா)
             in   India-  en la India(என் லா இந்தியா)
             in Germany -  en Alemania(என் அல்மேனியா)

in my shirt pocket -  en mi bolsillo de la camisa( என் மி போல்சீயோ தே லா கமிசா)
in the wallet -  en la cartera -( என் லா கர்தேரா)
in a building -  en un edificio(என் உன் எடிஃபீசியோ)
He is in the aeroplane-  Él está en el avión .(எல் எஸ்தா என் எல் அவியோன்)


 


இடங்களை குறிக்க, நேரத்தை குறிக்க,  இன்னும் பல இடைச் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. வரும் பதிவில் அவற்றை காணலாம்.



 

காட்டன் சாரீஸிற்கு சூப்பராக கஞ்சி போடலாமா?

காட்டன் சாரீஸ்களை கட்டாத, விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அழகாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த சாரீஸ் கட்டிய பெண்களை பார்க்கவே சூப்பராக இருக்கும். இந்த வெயில் காலத்திற்கு காட்டன் சாரிகளே ஏற்றது. நாமே வீட்டில் கஞ்சி போட்டு , அழகாக உடுத்தும்போது  , எல்லோரையும்  புதுப் புடவையா என்று கேட்க தூண்டும்.


 STEP -1

மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவிலேயே கஞ்சி தயார் செய்யலாம்.இதற்காக காஸ்ட்லி ஸ்டார்ச் பவுடர் வாங்க வேண்டாம். 1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி அல்லது மைதா மாவினை நீரில் கரைத்து, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

STEP---2

கட்டிகள் இல்லாமல் வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்கவும். மிகவும் இறுக்கமாக கசக்கி பிழியக் கூடாது.

STEP---3
டார்க் கலர் புடவைக்கு கொஞ்சம் சொட்டு நீலம் கூட கஞ்சியில் சேர்க்கலாம். கஞ்சியில் நனைத்த பின் , நன்கு உதரி, மடிப்புகளின்றி வெயிலில் உலர்த்தவும்.


STEP---4
 உங்களுக்கு பிடித்த  வாசனை திரவியத்தை(perfumes) கஞ்சியில் சில சொட்டு விடும் போது கஞ்சியின் அழுக்கு வாடை அடிக்காமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

STEP ---5
நன்கு நீவி அயர்ன் செய்யவும்.


 இளசுகள்   ,""தேரடி வீதியில் தேவதை வந்தா"".....என்று பாடுகிறார்களா ? உங்களை பார்த்து தாங்க.


rajma மசாலா கறி



ராஜ்மா, லெக்யூம்ஸ் என்று சொல்லும் சோயா பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதில் அதிகளவு புரதம், நார்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம் ,விட்டமின் பி6 ,மெக்னீசியம், மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது ,ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், குளுக்கோஸ் அளவை குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் ,வந்தவர்களுக்கு அந்த அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
          ஹார்ட் அடாக் தடுப்பானாக, சில வகை கேன்சர் தடுப்பானாகவும் இது  செயல்படுகிறது. 1 கப் ராஜ்மா ,45.3 % நார்ச்சத்து கொண்டது. 620 கலோரிகள் தரும்.

ராஜ்மா மசாலா கறி செய்ய தேவையானவை

ராஜ்மா 1கப்
வெங்காயம் நறுக்கியது --1கப்
தக்காளி நறுக்கியது---அரை கப்
இஞ்சி --பூண்டு விழுது ---1 ஸ்பூன்
பச்சை மிளகாய்--2
தனியா தூள்---1 ஸ்பூன்
மிளகாய் தூள் ---1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் ---1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு

தாளிக்க
பட்டை சோம்பு கிராம்பு

அலங்கரிக்க 
கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீம்


ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு தாளித்து ,வெங்காயம் ,வதக்கவும். லேசான பொன்னிறம் வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
வதங்கியதும், தக்காளி சேர்க்கவும். நன்கு சுருள வதங்கியதும், வேகவைத்த ராஜ்மா ,
தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீமால் அலங்கரிக்கவும்.
சப்பாத்தி, பூரி, புலாவ் போன்றவற்றிர்க்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.