Tuesday, May 10, 2011

கேழ்வரகு புலாவ்

புலாவ் பொதுவாக அரிசியில் செய்வார்கள்.சற்று வித்தியாசமாக கேழ்வரகு மாவில் புலாவ் செய்யலாமே.

தேவையானவை
 வெங்காயம் நறுக்கியது ---2
காரட், பீன்ஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு, நறுக்கியது ---வகைக்கு 1கப்
பச்சை பட்டாணி வேகவைத்தது---1கப்
இஞ்சி --- பூண்டு விழுது---2 ஸ்பூன்
பச்சை மிளகாய்---3
கேழ்வரகு மாவு---  2 கப்
உப்பு தேவை யானது
எண்ணை தேவையான அளவு
வெண்ணை --1ஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்


கடாயில் வெண்ணை போட்டு வெங்காயம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பட்டாணி, காய்களை போட்டு வேகவிடவும். காய்களுக்கு தேவையான உப்பு  மட்டும் சேர்க்கவும். கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உப்பு , ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணை விட்டு பட்டை சோம்பு கிராம்பு தாளித்து ,கரைத்த மாவை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் வரை கிளறவும். அதோடு வேகவைத்த காய்கள் சேர்த்து நன்கு கிளறி , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

தயிர் வெங்காயம்,  வெண்டைக்காய் பச்சடியோடு சூடாக பரிமாறலாம்.



"காயத்தை" மெருகேற்ற......

இந்த உடலுக்கு காயம் என்றொரு பெயரும் உண்டு. நம் உடல் ஆரோக்கியமாக ,பிணிகள் இன்றி நீண்ட நாள் வாழ நம் முன்னோர்கள் உணவிலேயே பல வகைகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் சாதத்தோடு பிசைந்து சாப்பிடும் பொடி வகைகள்.

ஐங்காயப் பொடி

தேவையானவை

மணத்தக்காளி வற்றல் ---1 கைப்பிடி
சுண்ட வத்தல்---1 கைப்பிடி
வேப்பம் பூ--- சிறிது
 மல்லி வதை---3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்----4
சுக்கு --10 கிராம்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு சுண்ட வத்தல் ,வேப்பம் பூ, மணத்தக்காளி வத்தல்களை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும் .மல்லி விதை , மிளகாயை தனியாக வறுக்கவும். வறுத்த வத்தல்கள், மல்லி, மிளகாய், சுக்கு ,உப்பு பெருங்காயம் சேர்த்து  மிக்ஸியில் பொடி செய்யவும்.

பயன்கள்

இந்த பொடியை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட ,பித்தம், பித்த மயக்கம், வயிற்றுப்பூச்சிகள், அல்சர், வயிற்று வலி, தீரும். பிள்ளை பெற்ற  பெண்கள் வாரம் ஒருமுறை உண்டுவந்தால் ஜீரணச்சக்தி கூடும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஏற்படும் ஜீரணக் கோளாறு நீங்கும். பால் குடித்தவுடன் கக்குவது நிற்கும்.



Spanish மொழி கற்கலாம்

இந்த பாடத்தில் prepositions எழுதும் முறை அறியலாம்.



The food is on the table.----La comida está sobre la mesa.( லா கொமிதா எஸ்தா சோபர் லா மேசா)
The flowers are on the table.----Las flores están sobre la mesa.(லாஸ் ஃப்ளோரஸ் எஸ்தான் சோபர் லா மேசா)
The managers are at the table.-----Los gerentes están en la mesa.(லாஸ் ஹெரன்தஸ் எஸ்தான் என் லா மேசா)
The coffee is on the table.----El café está sobre la mesa.(எல் காஃபே எஸ்தா சோபர் லா மேசா)
The candy is in the box.----El caramelo está en la caja.(எல் காரமிலோ எஸ்தா என் லா காஹா)

He sat on a chair.----Se sentó en una silla.( சே சென்தோ என் உன சீஜா)
The boy is in the box.----El niño está en la caja.(எல் நீனோ எஸ்தா என் லா காஹா)
The boxes are on the table.----Las cajas están sobre la mesa.(லாஸ் காஹாஸ் எஸ்தான் சோபர் லா மேசா)
I am at the door.----Estoy en la puerta.(எஸ்தோய் என் லா புஅர்தா)
I am at the building.---Estoy en el edificio.(எஸ்தோய் என் எல் எடிபீசியோ)
 There is a cow in the field.---Hay una vaca en el campo.(அய் உன வாகா என் எல் காம்போ)
Is he in his room?---¿Está en su habitación?(எஸ்தா என் சு ஹாபிடேசியன்?)