Thursday, April 14, 2011

இசை--எளிய அறிமுகம்---5

ஸ்வரத்திற்கு ஒத்த தமிழ் பெயர்கள்
ஸ(-ஸட்ஜம்)-----குரல்
ரி(ரிஷபம் )----துத்தம்
க(காந்தாரம்)----கைக்கிளை
ம(மத்தியமம்)----உழை
ப(பஞ்சமம்)---இளி
த(தைவதம்)---விளரி
நி(நிஷாதம்)---தாரம்

ஸ்வர ஸ்தானங்கள்
வட மொழிப் பெயர்                         தமிழ்பெயர்
ஸட்ஜம்                                              குரல்
சுத்த ரிஷபம்                                      குறை துத்தம்
சதுஸ்ருதி ரிஷபம்                           நிறை துத்தம்
சாதாரண காந்தாரம்                         குறை கைக்கிளை
அந்தர காந்தாரம்                               நிறை கைக்கிளை
சுத்த மத்யமம்                                    குறை உழை
பிரதி மத்யமம்                                    நிறை உழை
பஞ்சமம்                                               இளி
சுத்த தைவதம்                                   குறை விளரி
சதுஸ்ருதி தைவதம்                       நிறை விளரி
கைசிகி நிஷாதம்                              குறை தாரம்
காகலி நிஷாதம்                                நிறை தாரம்

"அகநிலைக்குரிய நரம்பின திரட்டி நிறை, குறை, கிழமை பெறுமென மொழிப "
                                                    (சிலப்பதிகாரம் 8 :39 --அடியார் உரை)
ராகம்
கேட்பதற்கு இனிமையாகவும், நம் மனதின் உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்கும் அல்லது  உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாகவும் உள்ள ஸ்வரங்களின் கோர்வை பல்வேறு பட்ட ராகங்களை உருவாக்குகின்றன. எந்த ஒரு ராகமும் அதற்கென பிரத்யேக குணாம்சங்களை கொண்டு ஜீவிக்கின்றன. கேட்பவர்களை மயக்கி தன்னிடத்தே வைத்துக் கொள்கிறது.
முதல் ஸ்வரமான ஸ உடலின் ஆறு பாகங்களான நாசி, தொண்டை, இதயம், வாய் நாக்கு, பல் முதலியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவானது. இதைத் தான் நாரதரும்
"யமாஸ்ருஷ்ட பிரஜாயந்தே ரிஷபத்யா ஷட் ஏவ து, தஸ்மாத்  ஸட்ஜ இதி பிரோக்தாஹ " என்கிறார்.
                                                      (இன்னிசை தரும்)


arts and crafts

எல்லோரும் எளிமையாக ஏதாவது ஒரு கை வேலை செய்ய கற்றுக் கொண்டுவருகின்றனர். அந்த வகையில் இன்று மணல் ஓவியம் செய்ய கற்றுக் கொள்வோமா.

தேவையான பொருட்கள்
நைஸாக உள்ள ஆற்று மணல்
கலர்கள்(acrylic /pearl colour)
தடியான அட்டை
வெல்வெட் அல்லது காட்டன் துணி
ஒட்டுவதற்கு பெவிகால்
விரும்பிய டிசைன்

செய்யலாமா

முதலில் தடியான அட்டையில் பெவிகால் தடவி துணியை ஒட்டி காயவிடவும். பின்னர் எடுத்துக் கொண்ட டிசைனை டிரேஸ் செய்யவும்.அதில் பெவிகால் தடவி. மணலை தூவி விடவும். அதிகமான மணலை காய்ந்ததும் தட்டிவிடலாம்.பின்னர் அதில் நாம் விரும்பிய கலர்களால் மணலின் மீது பெயிண்ட் செய்யவும். தேவைக்கேற்ப பிரேம் செய்யவும். சுவரில் மாட்ட ஏதுவான அழகான மணல் ஓவியம் இப்போது உங்கள் கைகளில்.