Monday, May 23, 2011

காலை இளங்கதிர்

மென் தென்றல் குழலும்
பாடும் குயில்கள் கானமும்,       
புள்ளினங்கள் நடனமும்
அற்புதமாய் பங்களிக்க
அன்புடன், அரவணைக்க
மென் நடை பழக வருகிறாள்
சூரியத் தாய்...
காலை இளங்கதிராய்...

கண்டன...மலர்ந்தன
சிற்றிளம் பெண் கொங்கையென.....
தாமரை மொட்டுக்கள்.

அல்லி பூத்ததென
மலர்ந்தது
வளை கர நங்கைகளின்
வண்ணக் கோலங்கள்.....

கண் விழி திறப்பதற்காய்,,,
நான் காத்திருக்க
மென் நகை பூத்தது
மாடியில் நான் வைத்த
ஒற்றை ரோஜா.....





நினைத்தது நடந்திட ......

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே-----(1)

ராமனாய் வந்து தோன்றி ராவணன் தன்னை வீட்டித்
தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப்
பராபரமாகி நின்ற பண்பிளை பகருவார்கள்
நராபதியாகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரே-----(2)

மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் தினமும் கூறினால் நினைத்து நிச்சயம் நடக்கும். இது என் அனுபவமும் கூட.


சுகப்பிரசவம் உண்டாக

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும், விண்ணோர்களும்
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்புற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே
ஒரு பகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த பாடலை கூறினாலும், பிறர் கூறக் கேட்டாலும்
நிச்சயம் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.