Wednesday, April 13, 2011

இசை--எளிய அறிமுகம்--4

நாதத்தின் இரு வகை 1.ஆஹதம் 2.அனாஹதம்.
ஆஹதம்
மனிதனால் உண்டாக்கக் கூடிய நாதமே ஆஹதம். சிந்தைக்கு விருந்தளித்து இன்பமளிக்கக் கூடியது.
அனாஹதம்
இயற்கையாக,வீசும் காற்று ,ஆர்ப்பரிக்கும் கடல் அலை,குயிலில் குரல், கிளியின் கீச்சு, முதலியவற்றால் உண்டாகக் கூடியது.
நாதம்,, நாபி, ஹ்ருதயம், கண்டம், மூர்த்தம் இவற்றிலிருந்து கிளம்பி ஸ்வரங்களாக வருகின்றன. நாபியிலிருந்து வருகின்ற ஸ்வரங்கள் மந்தரம், ஹ்ருதயத்திலிருந்து வருபவை மத்யம், நாசியிலிருந்து வருபவை தார ஸ்வரங்கள் என்று வழங்கப்படுகிறது.
நாத உபாசனையே மோக்ஷத்திற்கு ஏற்ற வழி என்று தியாகராஜர் தனது சோபில்லு என்ற ஜகன் மோகினி ராக கிருதியில் கூறியுள்ளார்.

ஸ்வரம்
கேட்ட உடனேயே மனதை ஈர்க்கும் வண்ணம் ,அளவோடு கூடிய ஒலியையே ஸ்வரம் என்கிறோம்.இது 7 ஆகும்.ஸ,ரி,க,ம,ப,த,நி என்ற இவையே சப்த ஸ்வரங்கள்.
ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு மிருகத்தின் குரலை ஒத்து இருப்பதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.திலீபனும், சுலக்ஷணாவும் ,காதலோடு தோட்டத்தில் நடை பயணம் மேற்கொள்ளும் போது கேட்ட மயிலில் அகவல் ஒலி ஸ வை ஒத்து இருப்பதாக காளிதாசரின் ரகுவம்சம் தெரிவிக்கிறது.அதே போல் ரி -- எருதின் குரலையும், க--ஆட்டின் ஒலியையும்,ம--க்ரௌஞ்ச பறவையின் குரலுக்கும், ப---குயிலின் குரலுக்கும், த---குதிரையின் கனைப்பையும், நி---யானையின் பிளிறலையும் ஒத்திருப்பதாக தெரிவிக்கிறது.











No comments:

Post a Comment