Monday, May 23, 2011

காலை இளங்கதிர்

மென் தென்றல் குழலும்
பாடும் குயில்கள் கானமும்,       
புள்ளினங்கள் நடனமும்
அற்புதமாய் பங்களிக்க
அன்புடன், அரவணைக்க
மென் நடை பழக வருகிறாள்
சூரியத் தாய்...
காலை இளங்கதிராய்...

கண்டன...மலர்ந்தன
சிற்றிளம் பெண் கொங்கையென.....
தாமரை மொட்டுக்கள்.

அல்லி பூத்ததென
மலர்ந்தது
வளை கர நங்கைகளின்
வண்ணக் கோலங்கள்.....

கண் விழி திறப்பதற்காய்,,,
நான் காத்திருக்க
மென் நகை பூத்தது
மாடியில் நான் வைத்த
ஒற்றை ரோஜா.....





No comments:

Post a Comment