Wednesday, April 27, 2011

மேத்தி பராத்தா

பராத்தா என்பது நம் ஊர் சப்பாத்தி தான். அதில் நடுவில் ஸ்டஃப் செய்து சப்பாத்தி போல் திரட்டி சுட்டு எடுப்பார்கள் அவ்வளவு தான். இது பொதுவாக வட நாட்டில் பிரசித்தி பெற்றது.

மேத்தி பராத்தா செய்ய தேவையானவை
1கப் கோதுமை மாவு
2 ஸ்பூன் எண்ணை
உப்பு தேவையான அளவு
1குழிக் கரண்டி வெதுவெதுப்பான பால்

மாவு தயாரிப்பு 
மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ,தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

ஸ்டஃப் செய்ய தேவையானவை
1 கட்டு வெந்தயக் கீரை
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் 2(பொடியாக நறுக்கவும்)
உப்பு தேவையான அளவு

தாளிக்க
பட்டை சோம்பு

கடாயில் எண்ணை விட்டு தாளிக்கவும்,அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு சிவப்பாகும் வரை வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கவும்.நன்கு வேகவிடவும். தேவையான உப்பு போட்டு கிளறி இறக்கவும்.


பராத்தா செய்முறை
மாவினை சிறு உருண்டையாக செய்து  கனமாக திரட்டவும்,அதில் ஸ்டஃப்பிங் வைத்து ஓரங்களை நன்றாக மூடி மெல்லிய தாக மீண்டும் திரட்டவும். தவாவை சூடாக்கி பராத்தாக்களை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பயன்கள்
வெந்தயக் கீரையில் இரும்புச் சத்து நிறைய உள்ளது.குளிர்ச்சி தரவல்லது. கோதுமை மாவில் நார் சத்து அதிகம்.








No comments:

Post a Comment