Tuesday, April 19, 2011

variety rices

கொத்தமல்லி புலாவ்

அவசியமான பொருட்கள்

பாசுமதி அரிசி ---1கப்
கொத்தமல்லி ---1 கட்டு
பெரிய வெங்காயம்---2
தக்காளி---2
இஞ்சி --சிறு துண்டு
பூண்டு--10
பச்சை மிளகாய்---4
கரம் மசாலா தூள்--1 ஸ்பூன்
வெண்ணை ---2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்ய துவங்கலாமா?

step 1:அரிசியை கழுவி, 15 நிமிடம் ஊறவிடவும். வெங்காயம், தக்காளி வெட்டிவைக்கவும். இஞ்சி ,பூண்டு அரைத்து விழுதாக்கவும்.
step 2: ஒரு கடாயில் வெண்ணை போட்டு லேசாக உருகியதும், பட்டை சோம்பு தாளிக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் வதக்கவும் . லேசான பிங்க் கலர் வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு அரிசியை சேர்த்து லேசாக பிரட்டிக் கொடுக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
step 3: எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் வைத்து உதிரியாக வேகவிடவும். 
step 4: வறுத்த முந்திரி, கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
 step 5:  சுவையான புலாவ் ரெடி டு ஈட்.





No comments:

Post a Comment