Tuesday, April 19, 2011

variety rices

கொத்த மல்லி சாதம்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி தழை ---1 கட்டு
அரிசி---1 கப்
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணை
நல்லெண்ணை

வறுத்து பொடி செய்ய

கடலை பருப்பு ---2 ஸ்பூன்
மல்லி விதை (தனியா )----4 ஸ்பூன்
 மிளகாய் வத்தல்---5
கடுகு ---1ஸ்பூன்
வெந்தயம் ---1ஸ்பூன்

தாளிக்க

கடுகு---1 ஸ்பூன்
வெந்தயம்---அரைஸ்பூன்
 மிளகாய் வத்தல் 2
வேர்கடலை--- 50 கிராம்
கறிவேப்பிலை--1 ஆர்க்கு



step1:கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு வறுத்து பொடி செய்ய தந்துள்ளவற்றில், கடலை பருப்பு, மல்லிவிதை, மிளகாய் வற்றலை தனியாவும்,கடுகு ,வெந்தயத்தை தனியாகவும் வறுத்து, ஒன்றாக கொரகொரப்பாக பொடி செய்யவும்

step2: புளியை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

step3:அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் வைத்து உதிரியாக சாதம் வடிக்கவும்

step4: ஒரு கடாயில் 3குழிக்கரண்டி எண்ணை விட்டு தாளித பொருட்களை போட்டு தாளிக்கவும்,அதில் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த பொடியைபோட்டு கட்டி தட்டாமல் கிளறவும். நன்கு கொதிக்கும் போது கொத்தமல்லி தழையை விழுதாக அரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். மேலாக சிறிதளவு நல்லெண்ணை விடவும்.கெட்டியாக சுருண்டு வர வேண்டும். இந்த பேஸ்ட் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பேஸ்டில் சாதத்தை கலந்தால் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.

பயன்கள்
விட்டமின் சி, இரும்புச் சத்து கொண்டது கொத்த மல்லி .



2 comments:

  1. ஆச்சரியமா இருக்கே? ஒரு வாரம் கெடாம இருக்குமா? ம் ம் புளி சாதமே 3 நாட்கள் தானே.. ?

    ReplyDelete