Wednesday, April 20, 2011

variety rices

இப்போது மாங்காய் சீசன் .மாங்காய் வைத்து என்ன செய்யலாம் ? என்று யோசிக்கவே வேண்டாம்.
மாங்காய் பாத் செய்யலாம்.

அத்தியாவசிய பொருட்கள்

1கப் அரிசி
உப்பு தேவையான அளவு

அரைத்துக் கொள்ள

1பெரிய மாங்காய் (தோலை நீக்கி துருவிக் கொள்ளவும்)
3 மிளகாய் வற்றல்
1 கப் தேங்காய் துருவல் 
1ஸ்பூன் சீரகம்

தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம் கறிவேப்பிலை

step 1:   அரைக்க கூறியுள்ளதை அரைக்கவும்.
step 2:  சாதத்தை உதிராக வடிக்கவும்
step 3:    ஒரு கடாயில் எண்ணை 4 ஸ்பூன் விட்டு தாளித்து ,அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்.சூடான சாதத்தை அதில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து மேலாக சிறிது நல்லெண்ணை விட்டு நன்கு கிளறி விடவும்.
step 4:   அப்பளம், சிப்ஸ், பச்சடி யோடு சுடாக சாப்பிட மாங்காய் பாத்  ரெடி.

 பயன்கள்

இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிபைன்ஸ், மெக்ஸிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.மாம்பழச்சதையில் 40% நார்ச்சத்து ,15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.காய் , பழம் இரண்டிலும் ஒரே மாதிரியான பலன்கள் உள்ளன.



No comments:

Post a Comment