Tuesday, May 10, 2011

"காயத்தை" மெருகேற்ற......

இந்த உடலுக்கு காயம் என்றொரு பெயரும் உண்டு. நம் உடல் ஆரோக்கியமாக ,பிணிகள் இன்றி நீண்ட நாள் வாழ நம் முன்னோர்கள் உணவிலேயே பல வகைகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் சாதத்தோடு பிசைந்து சாப்பிடும் பொடி வகைகள்.

ஐங்காயப் பொடி

தேவையானவை

மணத்தக்காளி வற்றல் ---1 கைப்பிடி
சுண்ட வத்தல்---1 கைப்பிடி
வேப்பம் பூ--- சிறிது
 மல்லி வதை---3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்----4
சுக்கு --10 கிராம்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு சுண்ட வத்தல் ,வேப்பம் பூ, மணத்தக்காளி வத்தல்களை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும் .மல்லி விதை , மிளகாயை தனியாக வறுக்கவும். வறுத்த வத்தல்கள், மல்லி, மிளகாய், சுக்கு ,உப்பு பெருங்காயம் சேர்த்து  மிக்ஸியில் பொடி செய்யவும்.

பயன்கள்

இந்த பொடியை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட ,பித்தம், பித்த மயக்கம், வயிற்றுப்பூச்சிகள், அல்சர், வயிற்று வலி, தீரும். பிள்ளை பெற்ற  பெண்கள் வாரம் ஒருமுறை உண்டுவந்தால் ஜீரணச்சக்தி கூடும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஏற்படும் ஜீரணக் கோளாறு நீங்கும். பால் குடித்தவுடன் கக்குவது நிற்கும்.



No comments:

Post a Comment