Monday, April 25, 2011

திரு நெல்வேலி அல்வா மட்டும் தான் ருசிக்குமா?

அல்வா என்றதும் நினைவுக்கு வருவது, திருநெல்வேலி அல்வா தான். இந்த அல்வா அதை விடவும் சுவையாக இருக்கும்.

பலாப்பழ அல்வா

தேவையானது

பலாச்சுளை ---10
தேங்காய் துருவல் 1கப்
சர்க்கரை---2 கப்
நெய்--- அரை கப்

செய்வோமா?

பலாச்சுளையை நெய்யில் வதக்கி, தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது, அரைத்ததை சேர்த்து கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலப்பொடி.போட்டு கீழே இறக்கி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

பயன்கள்
பலாச்சுளையில், விட்டமின் ஏ--5%, சி--11%,இரும்புச் சத்து,கால்சியம் --3% உள்ளது.இதைத்தவிர எண்ணிலடங்கா மினரல்களும் உள்ளது.





1 comment:

  1. கொஞ்சம் நாஞ்சில் நாட்டு சக்கைவரட்டிக்கு சகோதரிமாதிரி இருக்கு :-))

    ReplyDelete