Monday, April 18, 2011

variety rices

தினமும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்துவிடுகிறது. சற்று வித்தியாசமான சமையலை செய்தால் சுவையாக இருக்குமல்லவா?கலவை சாதம் என்றால் உடன் நினைவுக்கு வருவது எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் .இன்று வித்தியாசமாய் நெல்லிக் காய் சாதம் செய்யலாமா?

தேவையானவை

பெரிய நெல்லிக்காய் --10
1கப் அரிசி
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க தேவையானவை

எண்ணை ---2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய்---- 4
காய்ந்த மிளகாய் ---2
கடுகு--சிறிது
கடலைப்பருப்பு--- 2ஸ்பூன்
வேர்கடலை--- 2ஸ்பூன்

 செய்முறை

முதலில் குக்கரில் சாதத்தை உதிரயாக வடித்துக் கொள்ளவும்.பின் நெல்லிக்காய்களையும் லேசாக வேகவைத்து, கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணை விட்டு .கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிதம் செய்து
அதோடு நெல்லிக்காய் ,சாதம், உப்பு  போட்டு லேசாக கிளறவும். இறுதியில் சிறிதளவு கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மேலே தூவி அலங்கரித்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

பயன்கள்
விட்டமின் சி நிரம்பி இருக்கிறது. அசிடிட்டி வராமல் தடுக்கும் .சளித் தொல்லை நீங்கும்.




1 comment: