Thursday, May 5, 2011

கறிவேப்பிலை,,,புதினா பொடி

பல வகையான பொடி வகைகளை செய்து வைத்துக் கொண்டால் ,இரவு நேரத்தில் என்ன சமைப்பது ,எப்போதும் சாம்பார், குழம்பு தான் செய்கிறோமே என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். பொடிகள் இருந்தால் சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட்டு விடலாம்.

பொடி---1
கறிவேப்பிலை பொடி

தேவையானவை
கடலைப்பருப்பு ---1 கரண்டி
உளுத்தம் பருப்பு----2 கரண்டி
காய்ந்த மிளகாய்---4
கறிவேப்பிலை--- 1கப் (கழுவி சுத்தம் செய்து லேசாக காயவைக்கவும்)
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் 1 ஸ்பூன் எண்ணைவிட்டு பருப்புகள், மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.மீண்டும் 1ஸ்பூன் எண்ணை விட்டு கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும். சிறிது ஆறிய பின் , வறுத்த பொருட்கள், உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
காற்று புகாமல் டப்பாவில் வைத்திருந்தால் ,15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

பொடி---2 

புதினா பொடி

மேற்கூறிய  பொருட்களில் கறிவேப்பிலைக்கு பதிலாக புதினா இலைகளை சேர்க்கவும். மற்ற பொருட்கள், செய்முறை மேற்கூறியதே.

இதுவும் 15 நாள் வரை கெடாது.

பயன்கள்
கறிவேப்பிலை, புதினாவில் இரும்புச் சத்து நிறைய உள்ளது. பருப்புகளோடு சேரும் போது புரதமும் கிடைத்து சரிவிகித உணவாகிறது.

 (இன்னும் பல வகை கூறுகிறேன்)



No comments:

Post a Comment