Thursday, May 5, 2011

புரோட்டீன் ரிச் ஸ்பெஷல் வடகறி

எனக்கு ஏற்றார் போல் அருமையான ஜோடியை தயார் செய்ய மாட்டீர்களா ?என்று உங்கள் வீட்டின் இட்லி, தோசைகளின் கவலை தோய்ந்த குரல் கேட்கிறது. வடகறி அந்த குறையை நிச்சயம் போக்கும்

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு ----1கப்
துவரம் பருப்பு--கால் கப்
காய்ந்த மிளகாய் ---2
உப்பு---தேவையான அளவு
எண்ணை ---3 குழிக்கரண்டி

பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் உப்பு, மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக  அரைக்கவும்.
கடாயில் 1 கரண்டி எண்ணை விட்டு அரைத்த பருப்பு கலவையை நன்கு வறுக்கவும். அவ்வப்போது மீத முள்ள எண்ணையை சிறிது சிறிதாக விடவும். பருப்பு நன்கு உதிராக ,மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும். பருப்பின் மணம் நன்கு வரும்.
இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மசாலா செய்வதற்கு தேவையானவை

வெங்காயம்---3(அரைத்துக் கொள்ளவும்)
தக்காளி ----3(அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி, பூண்டு விழுது---2 ஸ்பூன்
மிளகாய் தூள்---1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணை தேவையானது

தாளிக்க
பட்டை,சோம்பு, கிராம்பு, ஏலம்
பச்சை மிளகாய் ---2

கடாயில் எண்ணை விட்டு தாளித்து, பின் அரைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி, பச்சை வாசனை போனவுடன், தக்காளி விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து மேலும் கொதிக்க விடவும். மிளகாய்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்க்கவும். இறுதியில் வறுத்து வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். தேவையெனில் சிறிதளவு எண்ணை அல்லது வெண்ணை மேலாக விடவும்.




No comments:

Post a Comment