Tuesday, June 14, 2011

பச்சை பட்டாணி குருமா.

தேவையான பொருட்கள்

 பச்சை பட்டாணி---1கப்
உருளைக்கிழங்கு நறுக்கியது--1கப்
தேங்காய்ப்பால்---1கப்
வெங்காயம் நறுக்கியது--1கப்
தக்காளி--4
பச்சைமிளகாய்---4
மிளகாய் தூள் --அரைஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
இஞ்சி-சிறு துண்டு
பூண்டு--5 பல்
கொத்தமல்லி---1கட்டு
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க

பட்டை சோம்பு லவங்கம்


உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி தனித்தனியாக வேகவைக்கவும்.

கொத்தமல்லி, பச்சைமிளகாய்,இஞ்சி அரைக்கவும்.

2 தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.

கடாயில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு பட்டை சோம்பு லவங்கம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பூண்டு சேர்க்கவும். வதங்கியதும், தக்காளி ,தக்காளி சாறு சேர்க்கவும்.

அரைத்த விழுதை சேர்த்து லேசாக கொதிக்கவிடவும்.

உருளைக்கிழங்கு,பச்சைபட்டாணி சேர்க்கவும்.

உப்பு , கரம் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியாக தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

பூரி, சப்பாத்தி, பிரியாணிக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.



1 comment:

  1. This is Abhilash MS from http://www.hindudevotionalblog.com/

    Is kannan233 your email id.

    I just sent you the Mahalakshmi Chalisa mp3 there. Let me know if you got it.

    Thanks,

    Abhi

    ReplyDelete