Thursday, April 21, 2011

variety rice

கோவைக்காய்(கறிக் கோவை) சாதம்

தேவையானவை

கறிக்கோவை --கால் கிலோ
அரிசி ---1கப்
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு 2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 4ஸ்பூன்
மிளகாய் வற்றல்--4
எண்ணை 1ஸ்பூன்


தாளிக்க 
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்கடலை
முந்திரி பருப்பு (விரும்பினால்)
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது ----
 step 1: கோவைக்காயை சுத்தம் செய்து நீள வாக்கில் கட் பண்ணுங்க
step 2: அரிசியை 2 கப் நீர் விட்டு உதிரான சாதமா வடிச்சு வைங்க.
step 3: எண்ணையைக் கடாயில் விட்டு , உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் போட்டு சிவக்க வறுத்துக் கொரகொரப்பா பொடி பண்ணுங்க.
step 4: கட் பண்ணி வைத்திருக்கும் கோவைக்காயைக் கடாயில் போட்டு 2 ஸ்பூன் எண்ணை விட்டு நல்லா வதக்கவும்.வதங்கியவுடன், சாதம், அரைத்த பொடி,தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கிளறவும்.  
step 5: இன்னொரு கடாயில் தாளிதம் செய்ய 2 ஸ்பூன் எண்ணை விட்டு ,கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, வேர்க்கடலை சிறிது, முந்திரிப்பருப்பு சிறிது ,பெருங்காயம் போட்டு தாளித்து கிளறிய சாதத்தில் கொட்டி நல்லா ஒரு முறை கிளறிவிடவும்.  
step 6: வித்தியாசமான சுவையுடன் கூடிய கறிக்கோவை பாத் தயார்.

பயன்கள்
அதிக நீர்ச்சத்து கொண்டது கறிக்கோவை. டயாபடீஸ் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது இது.லஞ்ச் பாக்ஸிற்கும் ஏற்றது.




No comments:

Post a Comment