Thursday, April 21, 2011

பாயசம்


அப்பி பாயசம்
பாயசங்களில் வித்தியாசமானதும் ,மிகுந்த சுவை மிக்கதும் ,பாரம்பரியமானதும் கூட. ஒவ்வொரு கர்நாடக வீட்டு விஷேசங்களில் தவறாமல் இடம் பெற்றிருக்கும். இனி செய்முறைக்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
ரவை ---100
கிராம்

சர்க்கரை --250 கிராம்
பால்--1லிட்டர்
நெய் () எண்ணெய் ---பொரிக்கத் தேவையான அளவு
ஏலப் பொடி---- சிறிதளவு

முந்திரி---10
கிஸ்மிஸ்---கொஞ்சம்
செய்முறை
ரவையை சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பின் சிறு சிறு பூரிகளாகத் திரட்டி நெய்யில் பொன்னிறமாகப் பொரிக்கவும். சிறிது ஆறிய பின் கையால் தூளாக்கவும் (பெரிதும்,சிறிதுமாக இருக்க வேண்டும். நைஸாக கூடாது.).பாலை 2 பாகமாகப் பிரித்துக் காய்ச்சிக் கொள்ளவும். ஒரு பகுதியில் தூளாக்கிய ரவை பூரியைப் போட்டு நன்கு வேக விடவும். வெந்த பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து வரும்போது 2வது பாகப் பாலை ஊற்றி ,ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ,கிஸ்மிஸ் சேர்த்துக் கீழே இறக்கவும்.சமைத்து, சுவைத்து ரிஸல்ட் எப்படி என்று கூறுங்கள்

குறிப்பு
சர்க்கரையை குறைத்துக் கொண்டு கன்டன்ஸ்டு மில்க் கூட சேர்க்கலாம் இன்னும் சுவையாக இருக்கும்.



No comments:

Post a Comment