Friday, May 6, 2011

TIPS

ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறியாமல், முக அழகிற்கான ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
ஆரஞ்சு தோலை காய வைத்து நன்கு உலர்ந்தது---1கப்,
காய்ந்த ரோஜா இதழ்--1கப்
இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.அதோடு கடலைமாவு---2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து ,அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி ,காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்---2
பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

டிப்ஸ்---3
தக்காளியை ஜூஸ் செய்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்--4
வெண்ணை சிறிது எடுத்து நன்கு குழைத்து முகத்தில் ,முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

டிப்ஸ்--5
நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதையும் முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு  கூடும்.







No comments:

Post a Comment