Monday, May 15, 2017

கண்டாங்கி சேலையிலே
*****************************************


கண்டாங்கி சேலையிலே
கஞ்சி கொண்டு போறவளே
கம்மாக்கரை ஓரத்திலே 
மாமன் நானும் 
நிக்கிறேன்டி கண்ணம்மா
நீ கண்டுக்காம 
போறியேடி செல்லம்மா
சும்மா நின்னு 
பேசினாத்தான் என்னம்மா
நீ குறைஞ்சித்தான்
போயிருவியா சொல்லம்மா

கருவாச்சி கட்டழகி 
சொல்லுறத கேட்டுக்கடி
உன் மனசத்தான் மாத்திக்கடி
இந்த மாமனதான் ஏத்துக்கடி

கூடையிலே கஞ்சி கொஞ்சம் இருக்குது
அது கண்ணடிச்சி மாமனதான் உசுப்புது
கிட்டவந்து நின்னாக்கா முறைக்குது
கட்டியிருக்கும் பட்டு மட்டும் இழுக்குது
மனசுக்குள்ள உன் நெனப்பு இருக்குது
மயக்கிப்போகும் புன்னகைக்கு ஏங்குது

வாங்கி வந்த தாலி உன்ன அழைக்குது
வஞ்சி உந்தன் கழுத்துக்குத்தான் தவிக்குது
பொழுது சாஞ்சி ரொம்ப நேரம் ஆகுது
உனக்காக காத்திருந்து உடலும் நோகுது

நிலக்கோட்டை ஊரினிலே
ஏகடநாதர் கோவிலிலே
கல்யாணம் தான் 
கட்டிக்கலாம்டி கண்ணம்மா
சம்மதம் ஒன்னு சொல்லிப்போடு பொன்னம்மா
கண்ணுக்குள்ள வெச்சிப்பேன்டி கண்ணம்மா
நாம கருத்தாக வாழலாம்டி பொன்னம்மா... !

ரஞ்சனா கிருஷ்ணன்

No comments:

Post a Comment