Monday, May 15, 2017

 

நெஞ்சு பொறுக்குதில்லையே
-----------------------------------------------------------
  ஒரு குப்பைத் தொட்டியின் வேதனை
----------------------------------------------------------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே
  மனிதர்களின் 
வேசமிடும் முகங்களை
காணும்போது...
வேண்டாமென 
தூக்கியெறிகின்ற
பொருட்களோடு 
எறிகின்ற பொருளா 
குழந்தைச் செல்வம்
இல்லையென பலரிங்கே
ஏங்கித் தவித்திருக்க
கிடைத்த செல்வமதை
தூக்கி வீசிட மனம்தான்
துணிந்தது எங்ஙணமோ?  

அன்பே அமுதேயென
தீஞ்சுவை வார்த்தைதனில்
மயங்கியே
காமத்தீயில் எரிந்துவிட்டு
வேண்டாத குழந்தையை
 மனமதை கல்லாக்கி
குப்பையில் எறிகின்றாய்
 
நாய்களும் எறும்புகளும் 
கடித்திடும்போது
 அழுதிடும் குழந்தையோடு
அழுகிறேன் உயிரற்ற நானும் .....!!

No comments:

Post a Comment