Monday, May 15, 2017

அன்ன நடையழகி
அலங்கார இடையழகி
பின்னல் சடையழகி கண்ணம்மா
பக்கத்திலே வாடி நீயும் செல்லம்மா

கட்டான கட்டழகா
கருத்தான பேச்சழகா
பின்னாடி வருவதென்ன சின்னையா 
பார்க்குறாங்க எல்லாரும்தான் செல்லையா

தென்னைதோப்பு ஓரத்திலே
தேங்காய பறிக்கையிலே
பார்க்காம போறியேடி கண்ணம்மா
நீ  மச்சானிடம் பேசலையேடி செல்லம்மா

மாந்தோப்பு பக்கத்திலே
மாங்காய பறிக்கையிலே
அணைச்சிக்க துடிப்பதென்ன சின்னயா
அஞ்சாறு மாசம் போகட்டும் செல்லையா
 
அந்தி சாயும் நேரத்திலே
 அல்லிப்பூ பூக்கையிலே
ஆத்துப்பக்கம் காத்திருந்தேன் கண்ணம்மா
நீ அங்கேயும் வரலையேடி செல்லம்மா

சோழவந்தான் பக்கத்திலே
பொழுது போன நேரத்திலே
சொக்கி நாம பேசிடலாம் கண்ணம்மா
சொன்னபடி அங்க வாடி செல்லம்மா

சோடிபோட்டு போகையிலே
சொக்கநாதர் பார்க்கையிலே
சொன்னபடி வந்திடுங்க சின்னையா
சம்மதம்ஒன்னு சொல்லிடுவேன் செல்லையா.

 ரஞ்சனா கிருஷ்ணன்
 

 

No comments:

Post a Comment