Monday, May 15, 2017

பயிறு தீஞ்சு போயாச்சு..... வயிறு காஞ்சு போயாச்சு....
--------+--------------


ஏ புள்ள கருப்பாயி 
இங்க வந்து பாருதாயி
மனசுக்குள்ள ஆசை வச்சு
சாமிக்கு தான் பூசை போட்டு
போட்ட விதை அத்தனையும்
ஒண்ணு கூட முளைக்கலியே

பெஞ்ச மழை பத்தலையே
போன எடம் புரியலையே
ஆறு குளம் ஆவியாச்சு
ஓடையெல்லாம் கட்டடமாச்சு

நட்டு வச்ச தென்ன வாழை
நறுங்கி தான் போயாச்சு
அத்த மக ரத்தினமே
ராத்தூக்கம் போயாச்சு

வீடு வித்த காசு போட்டு
செஞ்சி போட்ட வெள்ளாமை
வெத நெல்லு காணலயே
சோறு கூட இல்லையே....

கேட்க யாரும் இல்லையே
ராசா மனசு இறங்கலயே
பயிறு தீஞ்சு போயாச்சு
வயிறும்​ காஞ்சு போயாச்சு...!!

No comments:

Post a Comment