Monday, May 15, 2017

இமைக்குள் நீ
-------------------------------
அன்பே விழிகளின் வழியே
இதயம் நுழைந்தவள் 
 மெளனமாகிச் செல்கிறாயடி

காலை கதிரவனின்கதிர் பட்டு
மலர்கின்ற மலர்களில் 
உறங்கும் பனித்துளி போல

இமைகளில் துளிர்க்கின்ற
விழிநீர் தனை
விழிச்சிறைக்குள் 
பூட்டி வைக்கிறேன்

பிறர் அறியாது
விழிதாழ்த்தி நிலம் பார்த்தால்
என் காலடியிலும்  காவேரியா ...?!

ரஞ்சனா கிருஷ்ணன்.

No comments:

Post a Comment